மருதானையில் 70 லட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு…

மருதானை புகையிரத நிலையத்தின் அருகாமையில் இன்று(14) அதிகாலை விபத்துக்குள்ளான அதிசொகுசு காரில் இருந்து 70 லட்சம் ரூபாய் பெறுமதியான 68 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விபத்தின் போது குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.