சேனா படைப்புழு தாக்கம் – எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் நட்டயீடு வழங்க நடவடிக்கை…

(FastNews – Colombo) சேனா படைப்புழுக்களின் தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான சோள பயிர் செய்கையாளர்களுக்கான நட்டயீடு எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

படைப்புழுக்களின் தாக்கம் காரணமாக அம்பாறை மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மொனராகலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

படைப்புழு தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்