மின்சாரக் கட்டணமானது அதிகரிப்படாது – அமைச்சர் ரவி கருணாநாயக்க

(FASTNEWS | COLOMBO) – எம்முறையிலும் மின்சார கட்டணமானது அதிகரிக்கப்பட மாட்டாது என மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து ஆகிய தேரர்களை சந்தித்த போதே தெரிவித்திருந்தார்.

மின்சாரக் கட்டணங்களை அதிகரித்து மக்களை அசௌகரியத்தில் ஆளாக்க விரும்பவில்லை மாறாக குறித்த மின்சார கட்டணத்தினை குறைக்க வழிகளை ஆராய்ந்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.