(FASTNEWS-COLOMBO) கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் அடுத்த மாத இறுதி வாரத்தில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகும் கல்வியியல் கல்லூரி பாடநெறிகளுக்கென 8000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என ஆசிரியர் கல்வி ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.