(FASTGOSSIP |COLOMBO) – தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிகளவான நிதி தமக்கு நிதி அமைச்சில் இருந்து கிடைக்காது உள்ளதாக குறித்த அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் இது போன்ற நிலைமை ஏற்படுமாயின் தான் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சர் தயா கமகே குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.