நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்..

(FASTNEWS | NICOBAR ISLAND)அந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் இன்று(28) அதிகாலை 4.8 ரிக்டர் அளவிளான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் 12 நிமிடங்கள் வரையில் நீடித்த குறித்த நிலநடுக்கமானது 45Km தூரம் வரையில் உணரப்பட்டுள்ளதாகவும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும், இதுவரையில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிய வருகிறது.