(FASTNEWS| COLOMBO)- பயன்பாட்டில் உள்ள மரம் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்வதற்கான கால எல்லை இம்மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி அரசு, அரை அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப்படும் அனைத்து மரம் வெட்டும் இயந்திரங்களும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் மார்ச் மாதம் 15 ஆம் திகதி முன்னர் பதிவு செய்து அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்றுடன்(28) பதிவு செய்யும் நடவடிக்கையை நிறைவு செய்ய இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.