நெடுஞ்சாலையில் பேரூந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

(FASTNEWS-IRAN) ஈரான் நாட்டு தலைநகர் அருகே நெடுஞ்சாலையில் பேரூந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

ஈரான் நாட்டு தலைநகரான டெஹ்ரான் – கோம் நெடுஞ்சாலை வழியாக சுமார் 50 பயணிகளுடன் வந்த பேரூந்து, கெர்மான் நகரின் மத்திய பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 36 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன