பிரித்தானியாவிற்கு ப்ரேயா (Freya) சூறாவளி எச்சரிக்கை…

(FASTNEWS| UK)- பிரித்தானியாவின் சில பகுதிகளில் ப்ரேயா (Freya) சூறாவளி வீசக்கூடும் பிரித்தானிய வானிலை அவதான நிலையத்தினால் இன்று(02) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை(03) மாலை 3.00 மணி முதல் நாளை மறுதினம்(04) திங்கட்கிழமை காலை 6.00 மணி வரை ப்ரேயா (Freya) சூறாவளி வீசக்கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு , மத்திய மற்றும் தென் மேற்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதிகளில் 80Km வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளதோடு, இதன் காரணமாக பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பிரித்தானிய வானிலை அவதான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.