மரண தண்டனையை நிறைவேற்றும் நேர காலம் எனக்குத் தெரியும்…

(FASTNEWS | COLOMBO) – போதைப்பொருள் கடத்தல் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிச்சயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதியளித்துள்ளார்.

ஊடக பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று(06) காலை நடைபெற்று வரும் ஊடக சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மரண தண்டனை கட்டாயமாக நிறைவேற்றப்படும் என்று தெரித்த ஜனாதிபதி, ஆனால், அது எப்போதிலிருந்து நடைமுறைக்கு வரும் என்பதை கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.