700 கோடி வைரக்கல் கொள்ளை – ‘கெலுமா’ இனது பாதுகாப்பிற்கு 37 இலட்ச கொங்கோ சிங்க எண்ணெய் இட்ட தாயத்து அணிந்து…

(FASTGOSSIP | COLOMBO) – 700 கோடி பெறுமதிமிக்க வைரக்கல்லினை கொள்ளையடித்து வைத்திருந்த கெழும் இந்திக எனப்படும் ‘கெழுமா’ தனதும் வைரக்கல்லுக்கும் பாதுகாப்பிற்காக இந்நாட்டு பிரபல ஜோதிடர் ஒருவருக்கு 37 இலட்சம் ரூபா வழங்கி தாயத்து ஒன்றினை கட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாயத்தானது கொங்கோ வனத்தில் இருந்து பெறப்பட்ட சிங்கத்தின் எண்ணெய் வைக்கப்பட்ட தாயத்து என்றும் அதனை அணிய முன்னர் ‘கெழுமா’ 50 லீற்றர் பாலில் குளிக்க வேண்டும் என்றும் ஒருவார காலம் மரக்கறி உணவினை மாத்திரமே உட்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கபப்டுகின்றது.

அதன்பின்னர் பழங்களால் பூஜை செய்ய வேண்டும் என்பதும் நிபந்தனையாகும் என விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.