வெலே சுதாவின் மேன்முறையீட்டு மனு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு…

(FASTNEWS| COLOMBO) – கம்பொல விதானகே சமந்த குமார எனப்படும் வெலே சுதாவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக வெலே சுதாவினால் மேன்முறையீடு செய்த மனு விசாரணை நாளை(07) மேலதிக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(06) அறிவித்துள்ளது.

2008ம் ஆண்டு கால்கிஸ்சை பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் 07.05g தன்வசம் வைத்திருந்த நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டு 2015ம் ஆண்டு கொழும்பு மேல்நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.