‘பொறுத்தது போதும்’ முதலாவது மக்கள் சந்திப்பு – மஹிந்த தலைமையில் இன்று(08)…

(FASTNEWS | COLOMBO) – எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று(08) ‘பொறுத்தது போதும்’ என்ற தொனிப்பொருளில், ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முதலாவது மக்கள் சந்திப்பு கண்டியில் நடைபெறவுள்ளது.

கண்டி பிரதான சந்தைக்கு முன்பாக பிற்பகல் 2.00 மணியளவில் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ஐந்து பிரதான காரணங்களை அடிப்படையாக வைத்து கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.