தொடர்ந்தும் அதிக வெப்பநிலையுடன் கூடிய காலநிலை…

(FASTNEWS | COLOMBO) – வடக்கு , வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் நாளை(10) அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக , உடல் வறட்சி, தோல் நோய்கள் மற்றும் உடல் சோர்வு ஏற்படக்கூடும் என்பதால் அதிகமாக நீரினை அருந்துமாறும், நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் குறித்த நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.