(FASTNEWS | COLOMBO ) – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் அலுவலக அலுவலகக் குழுவின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 04 பேரினதும் பிணை மனு தொடர்பிலான தீர்ப்பு எதிர்வரும் 27ம் திகதி அறிவிப்பதாக விசேட மேல் நீதிமன்றம் இன்று(11) அறிவித்துள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்கு சொந்தமான 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுக்களின் கீழ் காமினி செனரத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.