(FASTNEWS | COLOMBO ) – அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அனைத்து பேக்கரி உற்பத்திகளதும் விலையினை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் பேக்கரி தொழிலுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை என குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆதலால், இது தொடர்பில் அரசுடன் கலந்துரையாடி, எதிர்வரும் தீர்மானங்களை எட்டவுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.