(FASTNEWS |COLOMBO)- எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பேரூந்து கட்டணங்களுக்கு எவ்வித தாக்கங்களும் இல்லை என தனியார் பேரூந்து உரிமையாளர்களது சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில்;
“டீசல் விலையானது ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதால் பேரூந்து தொழிலுக்கு தாக்கம் எதுவும் இல்லை.என்றாலும் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் ஒக்டேன் 95 பெட்ரோல் மற்றும் சூப்பர் டீசல் ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அது தான் பாவனைக்கு உகந்தது..” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.