பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையில் எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லை – பிரதமர்..

(FASTNEWS | COLOMBO) – மத்திய வங்கியின் பிணை முறி சம்பவம் தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் தனக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று(14) பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.