எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளன.
மேலும் இம்முறை பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கள் இரண்டு கட்ட நடவடிக்கைகளாக முன்னெடுக்கப்படவுள்ளன.
இதனடிப்படையில் இன்று(3) கல்வி துறையுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பொலிஸ் திணைக்களத்தினர் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் ஏனைய அரச துறை ஊழியர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(riz)