காலி ‘தெவட’ கடலோர சட்டவிரோத கட்டடங்களை அகற்ற இன்று(15) நடவடிக்கை…

(FASTNEWS | COLOMBO) – கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் பொலிசாரின் ஒத்துழைப்புடன், விசேட பொலிஸ் குழுவொன்றினால் இன்று(15) காலி ‘தெவட’ கடலோர பிரதேசத்தில் உள்ள சட்டவிரோத கட்டடங்கள் 27 இனை பிரதேசவாசிகள் மற்றும் அதன் உரிமையாளர்களது எதிர்ப்புகளுக்கு மத்தியில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறித்த கட்டடங்களை அகற்றும் போது நிலவிய பதற்ற நிலைகளை கட்டுப்படுத்த கலகம் அடக்கும் பொலிசாரும் அழைக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்ப்புகளுக்கு மத்தியில் குறித்த அகற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.