(FASTNEWS | COLOMBO) – அலுகோசு பதவிக்கு இருவரை தேர்ந்தெடுக்கும் நேர்முகப் பரீட்சை இம்மாதம் 21 மற்றும் 22ம் திகதிகளில் வெலிகட சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெறும் என சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பதவிக்காக 102 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றிருந்த நிலையில், அதில் 79 விண்ணப்பங்களே நேர்முகப்பரீட்சைக்கு தகுதி பெற்றுள்ளதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
அதில் 23 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.