நிஜ வாழ்கையில் தாயாகும் சமந்தா..

(FASTNEWS | INDIA)- நாகசைதன்யாவைத் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா, சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்டு, தற்போது, “மஜிலி”, “ஓபேபி சக்க குன்னவே” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமந்தா அளித்துள்ள ஒரு பேட்டியில், தாய்மை பற்றிக் கூறியுள்ளார்.

தனக்கு குழந்தை பிறந்த பிறகு, கண்டிப்பாக நடிப்புக்கு இடைவெளி கொடுத்துவிடுவதாகவும் அப்போது, தன் குழந்தை தான் தனக்கு உலகமாக இருக்குமென்றும் கூறியுள்ளார்.

மேலும், தன்னுடைய குழந்தைப் பருவத்தில், தான் சில பிரச்சினைகளைச் சந்தித்திருந்ததாகக் கூறியுள்ள சமந்தா, ஆனால் தன்னுடைய குழந்தைக்கு, அவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாவண்ணம், கூடவே இருந்து நன்றாக கவனித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.