இன்று(22) பிரதமரை சந்திக்கவுள்ள ஜே.வீ.பி…

(FASTNEWS|COLOMBO) நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்ககோரும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் ஜே.வீ.பி இன்று(22) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளது.

இன்று(22) பிற்பகல் 02 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில், ஜே.வீ.பியை அங்கத்துவப்படுத்தும் வகையில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத், சுனில் ஹத்துனெத்தி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.