(FASTNEWS|COLOMBO) நுகேகொடை – ஸ்டென்லி திலகரத்ன மாவத்தையில் புகையிரத கடவையில் மேற்கொள்ளப்படும் திருத்தப்பணிகள் காரணமாக குறித்த வீதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.
அதன்படி , இன்று(23) மற்றும் நாளைய தினங்களில்(24) இரவு 9 மணி தொடக்கம் அதிகாலை 5.30 வரையான காலப்பகுதியில் குறித்த வீதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.