(FASTNEWS|SUDAN) சூடானில் வெடிகுண்டில் இருந்த தாமிரத்தை பிரித்து எடுப்பதற்காக சிறுவர்கள் முயன்ற போது எதிர்பாராத வகையில் குண்டு வெடித்து சிதறியதில் 8 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைநகர் கார்டூமில் உள்ள ஓம்டுர்மான் நகரில் இராணுவ பயிற்சி மையத்துக்கு அருகே வெடிகுண்டு ஒன்றை சிறுவர்கள் கண்டெடுத்தனர். பின்னர் அவர்கள் அந்த வெடிகுண்டில் இருந்த தாமிரத்தை பிரித்து எடுப்பதற்காக அதனை செயலிழக்க செய்ய முயன்றபோது எதிர்பாராத வகையில் அந்த குண்டு வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.