கெசெல்வத்த தினுகவின் உதவியளர் ஒருவர் கைது…

(FASTNEWS|COLOMBO) பாதாள உலகக்குழு தலைவர் ‘கெசெல்வத்த தினுக’வின் உதவியாளரொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைத்தோட்டம் – டயஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடமிருந்து 2 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனையை குறித்த சந்தேகநபர் இன்று(26) மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.