பேரூந்து – லொறி விபத்தில் 28 பேர் வைத்தியசாலையில்…

(FASTNEWS|COLOMBO) வெலிகந்த பிரதேசத்தில் இடபெற்ற வாகன விபத்தில் 28 பேர் காயமடைந்த நிலையில், வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பேரூந்து மற்றும் லொறி, நேருக்கு நேர் மோதியமையினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக முதல் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.