பாதுகாப்பு செயலாளராக ஹேமசிறி?

எதிர்வரும் பொதுத் தேர்தலையொட்டி பதவியேற்கும் புதிய தேசிய அரசாங்கத்தில், பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்பிரகாரம், புதிய பாதுகாப்பு செயலாளராக, மக்கள் வங்கியின் தற்போதைய தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ நியமிக்கப்படலாம் என தெரிய வருகின்றது.

பல்வேறு அமைச்சுக்களில் செயலாளர் பதவிகளை வகித்த ஹேமசிறி பெர்னாண்டோ, தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராகவும் பணியாற்றியவர்.