மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு…

(FASTNEWS|COLOMBO) மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்களே விபத்திற்குள்ளாகியுள்ளன.

இதன்போது, மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்து தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.