ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம்…

(FASTNEWS|COLOMBO) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் கம்பஹா நகர சபை மைதானத்தில் நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று(29) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற, மே தின ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மே தின கூட்டத்தை நடத்துவது தொடர்பில் 7 குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.