(FASTNEWS | COLOMBO) – சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) புதிய நிறைவேற்று அதிகாரியாக இந்திய நாட்டவரான மனு ஸ்வோனி (manu sawhney) நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று(01) முதல் அவர் தனது பதவியினை பொறுப்பேற்று இருந்தாலும், ஐசிசி இனது முன்னாள் நிறைவேற்று அதிகாரியான டேவிட் ரிச்சர்ட்சன் எதிர்வரும் உலகக் கிண்ண தொடர் வரையில் புதிய நிறைவேற்று அதிகாரியுடன் வேலை செய்ய தாம் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.