(FASTNEWS|COLOMBO) இலங்கையின் முதலாவது ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 10ம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, இணையம் முதலான ஊடகங்கள் சார்ந்ததாக 47 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளதாக ஊடத்துறை அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒழுக்க விழுமியங்களை மதித்து செயற்படகூடிய ஊடக சமூகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.