(FASTNEWS|COLOMBO) போதையிலிருந்து விடுதலைப் பெற்ற நாட்டிற்கான நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழியளிக்கும் “சித்திரை மாத உறுதிமொழி” நிகழ்வு இன்று(03) காலை சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள் , மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.