(FASTNEWS|COLOMBO) இலங்கை கிரிக்கட் வீரர்கள் சுற்றுப்பயணங்களின் போது மதுபானம் அருந்தியுள்ளனரா என்பது குறித்து பரிசோதனை செய்ய இலங்கை கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
பரிசோதனையில் மதுபானம் அருந்தியுள்ளமை நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என இலங்கை கிரிக்கட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் திமுத் கருணாரட்ன மது போதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.