10ஆம் திகதிக்கு பின்னர் மின்சார தடை ஏற்படாது…

(FASTNEWS|COLOMBO) எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் மின்சார தடை ஏற்படாது என மின் சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நான்கு மாதங்களில் எந்த குறைபாடுகளுமின்றி மக்களுக்கு மின்சாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான தேவையான திட்டங்களை தற்போது மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்த அமைச்சர், மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மின்சாரத்தை மக்கள் பொறுப்புடனும் சிக்கனமாகவும் பயன்படுத்த்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்;