(FASTNEWS|COLOMBO) காலி – ரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேர் மீண்டும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை இன்று(08) காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.