(FASTNEWS | COLOMBO) – இன்று(10) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் தென் மாகாண சபையினை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் தென்மாகாண சபை ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் கையெழுத்திட்டுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 154 ஆ உறுப்புரிமைக்கு அமைய 08வது பந்தியின்படி இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தென்மாகாண சபையின் பதவிக் காலம் நேற்று(09) நள்ளிரவு நிறைவடைந்துள்ளது.