(FASTNEWS|COLOMBO) பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் நலன்கருதி இன்றும்(15) விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பேரூந்து சேவைகள் இன்று(15) செயற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைப் போக்குவரத்து சேவையின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் நிஹால் கிதுல்ஆராச்சி தெரிவித்துள்ளார்.
நேற்று முதல் கொழும்பிலிருந்து வௌிப்பகுதிகள் நோக்கி பயணிக்கும் பஸ் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் கிராமங்களுக்கான பஸ் சேவைகளை அதிகரித்துள்ளதாகவும் இலங்கைப் போக்குவரத்து சேவையின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் நிஹால் கிதுல்ஆராச்சி மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவிக்கின்றது.