வீதி விபத்துக்களில் 30 பேர் உயிரிழப்பு…

(FASTNEWS|COLOMBO) புத்தாண்டு காலத்தில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 11ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 1270 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 34 980 வாகனங்கள் தொடர்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.