நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை…

(FASTNEWS|COLOMBO) நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழையுடனான வானிலை தொடரந்து நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றுமு; மேல் மாகாணங்களிலும், மன்னர் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவித்துள்ளது.

அத்துடன், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடற் பிராந்தியங்களில் கடும் மழை பெய்யக்கூடும் எனவும், குறித்த சந்தர்ப்பங்களில் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.