உலகக்கிண்ண கிரிக்கெட் – மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்ல தடை…

(FASTNEWS|COLOMBO) 2019 உலகக் கிண்ண போட்டி விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்லும் இந்திய வீரர்கள் மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்ல பி.சி.சி.ஐ தடைவிதித்துள்ளது.

50 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் அடுத்த மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை 46 நாட்கள் நடைபெறவுள்ளது.

நீண்ட நாள் தொடரின்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மனைவி மற்றும் காதலிகளை (WAGs) ஆகியோரை தங்களுடன் அழைத்துச் செல்வது வழக்கம்.

ஆனால் முக்கியமான தொடர் என்பதால் இந்திய வீரர்கள் முதல் 20 நாட்கள் வரை மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்ல பிசிசிஐ தடைவிதித்துள்ளது.

20 நாட்களுக்குப்பின் அழைத்துச் செல்லலாம் எனவும் ஆனால், வீரர்கள் செல்லும் பேரூந்தில் இணைந்து செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.