நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி… (photos)

(FASTNEWS|COLOMBO) கடந்த 21 ஆம் திகதி வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற நீர்கொழும்பு-கட்டுவாப்பிட்டி தேவாலயத்தின் நிலைமையை கண்டறிவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(23) காலை குறித்த பகுதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது அருட் தந்தை ஸ்ரீலால் பொன்சேக்காவை சந்தித்த ஜனாதிபதி, பிரதேசத்தின் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் தனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபங்களையும் தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த தேவாலயத்தின் நிர்மாணப் பணிகளை மிக விரைவில் மேற்கொள்வதற்கு இலங்கை இராணுவத்திற்கு தாம் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.