(FASTNEWS|COLOMBO) மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நேற்று(24) நாடுகடத்தப்பட்ட அபூபக்கர் மொஹமட் பதூர்தீன் என்பவர், மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று(24) நாட்டுக்கு வந்த நிலையில், விமானநிலையத்தில் வைத்து குற்றப்புலானாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.