பாராளுமன்ற அரசியலமைப்புச் சபை நாளை(26) கூடுகிறது..

(FASTNEWS | COLOMBO) – சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற அரசியலமைப்புச் சபை நாளை(26) காலை 11.00 மணிக்கு பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதன்போது, புதிய பிரதம நீதியரசர், அரச கணக்காய்வாளர் ஆகியோரின் நியமனம் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.