உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி..

(FASTNEWS| COLOMBO) – கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கான பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அந்த பொறுப்பிலிருந்து விலகதான் ஒருபோதும் தயாரில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக பிரதானிகளுடன் இன்று(26) காலை நடைபெறும் விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.