துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் ஒருவர் பலி..

(FASTNEWS| COLOMBO) – அம்பாறை – கல்முனை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் மற்றொரு குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் ஒருவர் பலியாகியுள்ளதோடு மூவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இராணுவப்பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் இராணுவ இழப்புக்கள் எதுவும் இல்லை எனவும் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.