காலிமுகத்திடலில் பேரூந்தினால் மோதுண்டு பொலிஸ்காரர் பலி

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் வீதிக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ்காரர் ஒருவர் தனியார் பயணிகள் பேரூந்து ஒன்றினால் மோதுண்டு மரணமானார்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

42 வயதான இந்த பொலிஸ்காரர் சங்ககிரி லா ஹோட்டல் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போது பேரூந்தினால் மோதுண்டுள்ளார்.

மொரட்டுவையில் இருந்து கொழும்பை நோக்கி வந்த பேரூந்தே இவரை மோதியுள்ளது.

மற்றும் ஒரு வாகனத்தை முந்திச்செல்ல முயன்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தின் போது கடும் காயங்களுக்கு உள்ளான பொலிஸ்காரர் பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் உயிரிழந்தார்