(FASTNEWS|COLOMBO) கல்முனை, சவளக்கடை மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(29) காலை 8 மணியுடன் நீக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதிகளுக்கு நேற்று(28) மாலை 5 மணி முதல் மறுஅறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.