(FASTNEWS|COLOMBO) இன்று(29) காலை முதல் அலுவலக புகையிரத சேவைகள் வழமை போல் இயங்குவதாக புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை பொலிஸ் ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்தமை காரணமாக இரவு தபால் புகையிரத சேவை இடம்பெறவில்லை. ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர் இரவு தபால் புகையிரத சேவை மேற்கொள்ளக்கூடியதாக இருக்குமென்று புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று(29) முதல் இரவு தபால் புகையிரத சேவைகள் இயங்குவதாக புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.