(FASTGOSSIP | COLOMBO) – நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கப்பெறும் வரை காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை கட்டாய விடுமுறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பியுள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன
கடந்த 21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் ஜனாதிபதியினால் பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.